தொண்டி மக்களே தயாராகுங்கள்! மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–27 தொடங்குகிறது – ஏன் இது அனைவருக்கும் முக்கியம்?

தொண்டி: நாட்டின் மிகப்பெரிய தரவு சேகரிப்பு நடவடிக்கையான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2027) முதல் கட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளன. இந்த கணக்கெடுப்பு மூலம் ஒரு ஊரின் மக்கள் தொகை, வீடுகள், அடிப்படை வசதிகள், கல்வி, குடிநீர், கழிப்பறை, இணைய வசதி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. முதல் முறையாக டிஜிட்டல் முறையிலும் சுயப் பதிவு (Self Enumeration) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொண்டியின் வளர்ச்சி – முந்தைய கணக்கெடுப்பு சொல்வது… Continue reading தொண்டி மக்களே தயாராகுங்கள்! மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–27 தொடங்குகிறது – ஏன் இது அனைவருக்கும் முக்கியம்?

மதுரை – தொண்டி நான்குவழிச் சாலை: தொண்டி துறைமுகக் கனவு நனவாகும் காலம் நெருங்குகிறதா?

தொண்டி:மதுரை – தொண்டி நான்குவழிச் சாலைத் திட்டத்திற்கு புதிய வேகம் கிடைத்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தொண்டி மக்களிடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட துறைமுக மேம்பாட்டுத் திட்டம் மீண்டும் உயிர் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இருவழிச் சாலையாக உள்ள மதுரை – தொண்டி சாலை, நான்குவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டால், மதுரை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலிருந்து தொண்டியை விரைவாக அடைய முடியும். இது சரக்குப்… Continue reading மதுரை – தொண்டி நான்குவழிச் சாலை: தொண்டி துறைமுகக் கனவு நனவாகும் காலம் நெருங்குகிறதா?

தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டி, ஜூலை 16:இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (16.07.2026) காலை 11.00 மணியளவில் தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொண்டி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர்.தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய… Continue reading தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி

தொண்டி, ஜூலை 16:தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பெண்கள் இன்று (16.07.2026) காலை 10.00 மணியளவில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கடந்த பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும், குழாய் மூலம் சீரான… Continue reading தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி

தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு

தொண்டி, ஜூலை 15:இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன், I.A.S., இன்று "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டத்தை திருவாடானையில் தொடங்கி வைத்து, அதன் பின்னர் தொண்டி நகருக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். பேருந்து நிலையத்தில் ஆய்வுதொண்டி… Continue reading தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு

தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விழா: பொறியாளர் எம்.எம். அபூபக்கருக்கு விருது வழங்கி கௌரவம்!வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டி மாநகரில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துமத தர்ம பரிபாலன சபையின் சார்பில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (18.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்நிகழ்வில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து இந்து கிராமத்… Continue reading தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா

தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்

தொண்டி: தொண்டி பேரூராட்சித் துணைத்தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பான சம்பவம் தொண்டியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தொண்டியில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியினர், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால் ஏற்பட்ட விவகாரத்தில், ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியினருடன் தொலைபேசி வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் ஹிந்து பரிபாலன சபை குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திரன்… Continue reading தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்

தொண்டி பகுதியில் BSNL நெட்வொர்க் தடை: வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற எண்ணம்

தொண்டி பகுதியில் பல நாட்களாக BSNL நெட்வொர்க் சேவை முழுமையாக செயலிழந்து இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் தினசரி தொடர்புகளிலும், தொழில் சார்ந்த பணிகளிலும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, பி.எஸ்.என்.எல். சொத்துகள் நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யப்பட்டதால், இந்த நெட்வொர்க் பிரச்சினை உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்இந்த நெட்வொர்க் தடையின் காரணமாக, வாடிக்கையாளர்கள் இன்றியமையாத தொலைபேசி அழைப்புகளையும், இணைய சேவையையும் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். வேலையுடன் தொடர்புடைய மற்றும் தனிப்பட்ட… Continue reading தொண்டி பகுதியில் BSNL நெட்வொர்க் தடை: வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற எண்ணம்

நம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.

நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முழு விபரம். ஊராட்சி தலைவர் திருமதி ஆ பாண்டிச்செல்வி வார்டு உறுப்பினர்கள் வார்டு 1 திரு கா பாண்டியராஜன் வார்டு 2 திருமதி இ சுமையா பானு வார்டு 3 திரு மு ஜகுபா் அலி வார்டு 4 திருமதி ந பதுருநிஸா வார்டு 5 திருமதி மு நூர்ஜஹான் வார்டு 6 திருமதி மு பரக்கத் நிஷா வார்டு 7 திரு நெ சேகு கனி வார்டு… Continue reading நம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.

விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:– மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு… Continue reading விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்