தொண்டி: நாட்டின் மிகப்பெரிய தரவு சேகரிப்பு நடவடிக்கையான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2027) முதல் கட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளன. இந்த கணக்கெடுப்பு மூலம் ஒரு ஊரின் மக்கள் தொகை, வீடுகள், அடிப்படை வசதிகள், கல்வி, குடிநீர், கழிப்பறை, இணைய வசதி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. முதல் முறையாக டிஜிட்டல் முறையிலும் சுயப் பதிவு (Self Enumeration) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொண்டியின் வளர்ச்சி – முந்தைய கணக்கெடுப்பு சொல்வது… Continue reading தொண்டி மக்களே தயாராகுங்கள்! மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–27 தொடங்குகிறது – ஏன் இது அனைவருக்கும் முக்கியம்?
Tag: News
தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விழா: பொறியாளர் எம்.எம். அபூபக்கருக்கு விருது வழங்கி கௌரவம்!வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டி மாநகரில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துமத தர்ம பரிபாலன சபையின் சார்பில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (18.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்நிகழ்வில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து இந்து கிராமத்… Continue reading தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா
நம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.
நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முழு விபரம். ஊராட்சி தலைவர் திருமதி ஆ பாண்டிச்செல்வி வார்டு உறுப்பினர்கள் வார்டு 1 திரு கா பாண்டியராஜன் வார்டு 2 திருமதி இ சுமையா பானு வார்டு 3 திரு மு ஜகுபா் அலி வார்டு 4 திருமதி ந பதுருநிஸா வார்டு 5 திருமதி மு நூர்ஜஹான் வார்டு 6 திருமதி மு பரக்கத் நிஷா வார்டு 7 திரு நெ சேகு கனி வார்டு… Continue reading நம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.
மரைக்காயர்கள் யார் ??
சென்னையின் கோவளம் தொடங்கி குமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் வரை தமிழக முஸ்லிம்கள் கடற்கரையோரம் பரந்து விரிந்து கிடப்பதை பார்க்கின்றோம் இவர்களது வரலாறு 1200 ஆண்டுகளுக்கு பழமையானது இதில் பல்வேறு வரலாற்று உண்மைகள் அடங்கிக் கிடக்கின்றன. எவ்வாறு இவர்கள் கடற்கரையோரம் அடர்த்தியாக இருக்கின்றார்கள் என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் இஸ்லாத்தை போதிக்க வந்த தாபியீன்கள் மற்றும் தபோ தாபியீன்கள் அவுலியாக்களாக மாற்றப்பட்டனர். நாகூர் ஏர்வாடி சென்னை கோவளம் போன்ற தர்காக்களை நாம் பார்க்கலாம் ஒருகாலத்தில் மரக்கலங்களை உருவாக்கி பயணித்தவர்கள்… Continue reading மரைக்காயர்கள் யார் ??
ஆந்திராவிலும் டாஸ்மாக்
இன்று முதல் மதுக்கடைகளை ஆந்திர அரசே ஏற்று நடத்தும் நிலையில் கடை திறப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி (இன்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாக கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான… Continue reading ஆந்திராவிலும் டாஸ்மாக்
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.
இராமநாதபுரம் | செப் 28 -2019 வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை *********************************************************************** கடந்த 2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது… Continue reading வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.
புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் இன்று (26.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் TDCM-1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, விதை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொகுப்பு My Thondi.Com Team
எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.
ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார். நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா. யார் இந்த கிரெட்டா ? கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி. சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு… Continue reading எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.
நவாஸ் கனி MP யுடன் மத்திய மந்திரி சந்திப்பு
இராமநாதபுரம் | செப் 25 மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தாமோர் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். சந்திப்பின் போது இராமநாதபுரம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்கப் பெறவும், விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தும் வண்ணம் புதிய திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தினார். தகவல் : MyThondi.Com Team
தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
தொண்டி - 24/02/2019 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டி கிளை சார்பாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை தொண்டி - வெள்ளை மணல் தெருவிலுள்ள தவ்ஹீத் திடலில் 24-02-2019 ஞாயிறு காலை 7:15 மணிக்கு நடைபெற்றது! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! என அல்லாஹ்விடத்திலே கேட்டு பிரார்த்தனை செய்து பின்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து… Continue reading தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை