நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.நவாஸ் கனி MP அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நம்முடைய மீனவர்களின் நிலை குறித்து விவாதித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.. ------------------------------------------------------------------------ அன்பார்ந்த இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சொந்தங்களே.., என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் முக்கிய பிரச்சனையாக மூன்றை முன்னிலைப்படுத்தியிருந்தோம். அதில் முதன்மையாக நம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை. அது குறித்து பல்வேறு கோணங்களில்… Continue reading நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.

தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

தொண்டி - 24/02/2019 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டி கிளை சார்பாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை தொண்டி - வெள்ளை மணல் தெருவிலுள்ள தவ்ஹீத் திடலில் 24-02-2019 ஞாயிறு காலை 7:15 மணிக்கு நடைபெற்றது! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! என அல்லாஹ்விடத்திலே கேட்டு பிரார்த்தனை செய்து பின்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து… Continue reading தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

நெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.

நெல்லை - 20/02/2019 பணியில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி சில்பா பிரபாகர் சதீஷின் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அரசின் விவசாயிகளுக்கு உதவித் தொகை ₹6000 வழங்க விண்ணப்பங்களை பெறுவதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனமின்மையமாக செயல்படுவதாகவும், பணிக்கு சரியாக வருவதில்லை என்பதாக கூறப்பட்ட புகார்களை தொடர்ந்து இந்த ஆடியோ பதிவை அவர் அனுப்பியுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் பரவி பலரும் அவருக்கு பாராட்டுகள் தெறிவித்துள்ளனர்.

ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்

தேர்வுப் பரிசுகள் லிஸ்ட்

நமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெறும் மாணவ மாணவிகள் பட்டியல். முதல் பரிசு பெறுபவர்கள் A. ஹதீஜத் ரினா S. சாரத் ரியா S. அஸ்ஃபத் நஹ்லா U. ரீமா பர்வீன் A. முஹம்மது ஜாஸிர் H. நூருல் ஆஃபியா R. ஃபரிலத் ஃபாஸிஹா A. ஜாஸிம் அஹ்மத் S.… Continue reading தேர்வுப் பரிசுகள் லிஸ்ட்

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ்… Continue reading தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.

தொண்டி | 10-12-2018 கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. பலர் வீடுகளை இழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. எனவே டெல்டா பகுதிகளை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நமது தொண்டியில் இருந்தும் அனைத்து ஜமாஅத்துகளின் கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் நிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 05-12-2018… Continue reading தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.

உறவுகள் அறக்கட்டளை மூலம் பள்ளிவாசல் சீரமைப்பு.

தொண்டி | 13-12-2018 நமது ஊர் தொண்டி எம்.ஆர்.பட்டணம் ஜமாஅத் மற்றும் நமது உறவுகள் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்த இருக்கும் பள்ளிவாசல் மராமத்துப் பணிகள் மறுசீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல் தொடர்பான பணிகள் இன்று இறைவனின் உதவியால் ஆரம்பமாகியுள்ளது.! MyThondi.Com™ Team.

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !? நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது. ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!! அப்படியானால் இது பாதுகாப்பானதா… Continue reading தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி. தொண்டியில் புதிய ஏடிஎம்(ATM) உதயம். தொண்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் புதிதாக இன்று 28-11-2018 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது * இந்தியா1 ஏடிஎம். இந்த ATM மெஷினின் பயன்பாடுகள்: ⏰24 மணி நேர சேவை 💳 அனைத்து வங்கி ATM கார்டுகளையும் பயன்படுத்தலாம். 💳 பணம் எடுப்பதற்க்கும் ,வங்கி இருப்பித் தொகை சரிபார்ப்பதற்கும் உபயோகிக்கலாம். 💳ஒரு முறை பரிவர்த்தனையில் ரூ.100… Continue reading தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.