மத்திய  அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.

தொண்டி | செப்டம்பர் 20.

பள்ளியை துாய்மையாக பராமரித்த தொண்டி அரசு தொடக்க பள்ளிக்கு புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பள்ளி கல்வி எழுத்தறிவு தொடக்கநிலை சார்பில்அரசு தொடக்கபள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளை துாய்மையாக வைத்திருப்பது குறித்துஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிக்கும் பள்ளிகளுக்கு சிறந்த விருதான புரஸ்கார் விருது வழங்கபட்டு வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகளை

மேம்படுத்துதல், துாய்மைபடுத்துதல், சுகாதாரம் தொடர்பான நடைமுறைகளை கல்வி அதிகாரிகள்

ஆய்வு செய்த பிறகு முதலில் மாவட்ட அளவிலும், பின்பு மாநில அளவிலும் இந்த விருது

வழங்கபட்டு வருகிறது. தொண்டி அரசு தொடக்கபள்ளி (மேற்கு) பள்ளிக்கு மாநில அளவில்

தேர்ந்தெடுக்கபட்டு இந்த விருது வழங்கப்பட்டது. பள்ளியை சுற்றிலும் மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மூலிகை செடிகள் வைக்கபட்டுள்ளன.

பள்ளியில் மின்விசிறியும், விளக்கு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. 

பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி கூறியதாவது: 
இப்பள்ளியில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வசதிகள் செய்யபட்டுள்ளது. ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் இப் பள்ளி தேர்வு செய்யபட்டு புரஸ்கார் விருது வழங்கபட்டது என்றார்.

Leave a comment