பொதுமக்கள் புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை – அவசர தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களின் குறைகள், புகார்கள் மற்றும் அவசரகால தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை (District Control Room) செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், புகார்கள், இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்கள் மற்றும் பிற அவசர நிலை குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்காக கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன:

83001 75888

86673 67897

86087 76756

79042 71774


பொதுமக்கள் அவசர காலங்களில் மேற்கண்ட எண்களை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு தங்களது தகவல்கள் மற்றும் புகார்களை பதிவு செய்து, தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– MYTHONDI.COM | மாவட்ட செய்திகள்

Leave a comment