தொண்டி - 24/02/2019 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டி கிளை சார்பாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை தொண்டி - வெள்ளை மணல் தெருவிலுள்ள தவ்ஹீத் திடலில் 24-02-2019 ஞாயிறு காலை 7:15 மணிக்கு நடைபெற்றது! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! என அல்லாஹ்விடத்திலே கேட்டு பிரார்த்தனை செய்து பின்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து… Continue reading தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
Month: February 2019
நெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.
நெல்லை - 20/02/2019 பணியில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி சில்பா பிரபாகர் சதீஷின் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அரசின் விவசாயிகளுக்கு உதவித் தொகை ₹6000 வழங்க விண்ணப்பங்களை பெறுவதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனமின்மையமாக செயல்படுவதாகவும், பணிக்கு சரியாக வருவதில்லை என்பதாக கூறப்பட்ட புகார்களை தொடர்ந்து இந்த ஆடியோ பதிவை அவர் அனுப்பியுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் பரவி பலரும் அவருக்கு பாராட்டுகள் தெறிவித்துள்ளனர்.
ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.
தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்
நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019