தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நமது தொண்டியில் அனைத்து தெரு ஜமாஅத் சார்பாக நமதூர் மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி S. முஹம்மது காசிம் யூசுஃபீ அவர்கள் தொழுகை நடத்த, தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் மௌலவி A. முஹம்மது ஹனீஃப் ஜமாலி அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்.
இறுதியாக மௌலானா மௌலவி H. முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் துஆ செய்தார்கள்.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.