சென்னை பெருநகர காவல் - போக்குவரத்து மாற்றம் மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் மாண்புமிகு சீன அதிபர் அவர்களின் சென்னை வருகையை முன்னிட்டு 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11.10.2019 மற்றும்12.10.2019 ஆகிய தேதிகளில் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை)¸ அண்ணாசாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை)¸ சர்தார்… Continue reading சென்னையில் போக்குவரத்து மாற்றம் – விபரங்கள்.
Author: மக்கள் ரிப்போர்ட்டர்
ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு
தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி,… Continue reading ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு
ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி
2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை (10-10-2019) முதல் விண்ணப்பிக்கலாம் என ஹஜ் கமிட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்ஷாஅல்லாஹ்10-10-2019 முதல் 10-11-2019 வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.இந்த வருடம் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் விண்ணப்பம் வசதி மட்டுமே உள்ளது. எனவே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.வழிகாட்டி விபரங்களை http://hajcommittee.gov.in/ என்ற இந்திய ஹஜ் குழு இணைய தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாக ஹஜ்… Continue reading ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி
லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?
திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது.இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து திருடிய வீடியோக்கள் வெளியாகிய நிலையில் கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை திருவாரூர் பகுதியில் வாகனசோதனையின் போது டூவிலரில் சென்று கொண்டிருந்த இருவரை மறித்த போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டுள்ளான்.மற்றொரு திருடன் சுரேஸ் தப்பியோடினார். மணிகண்டனை பிடித்த போது அவனிடம் இருந்த மூட்டையில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது. அந்த… Continue reading லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?
பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32
இந்திய துணைக் கண்டத்தோடு இராமேஸ்வரம் தீவை சாலை வழியாக இணைக்கும் பாம்பன் (அன்னை இந்திரா காந்தி) பாலத்திற்கு வயது 32. மண்டபம் - பாம்பன் இடையே உள்ள கடல் மீது சுமார் 2.32 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதத்தில் ரூ 19.26 கோடி மதிப்பீட்டில் 72 தூண்களுடன் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். மிகுந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக,… Continue reading பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32
தீவிரவாதத்திற்கு மதமில்லை.
எந்த ஒரு மதத்திற்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அனைத்து தீவிரவாதங்களும் அரசியலுடன் தொடர்புடையவையாகும். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். உலகில் வரலாறு நெடுகிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். செப்டம்பர் 11 க்கு முன்னர் 75 வீதமான தாக்குதல்களை இந்துக்களான தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர். ஆனால் அதற்கு காரணமாக எவரும் இந்து மதத்தை குறிப்பிடவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் அமெரிக்க கப்பல்களைத் தாக்கினர். ஆனால் எவரும்… Continue reading தீவிரவாதத்திற்கு மதமில்லை.
மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ராமேசுவரம் :- மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு படகுக்கும் அரசால் மாதம் தோறும் 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள 10 இரும்பு படகுகளுக்கு மட்டும் மானிய டீசல் வழங்கப்படவில்லை. விசைப் படகுகளில் 10 படகுகள் இரும்பால் ஆன படகுகளாக உள்ளதால் அந்த படகுகளுக்கு மட்டும் அரசால் வழங்கப்பட்டு வரும் மானிய… Continue reading மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தனியாரிடம் செல்கிறது இந்திய ரயில்வே.
சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சகத்தின் 100 நாட்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது. அதன்படி, டில்லி மும்பை, டில்லி ஜம்மு, காட்ரா, டில்லி – ஹவுரா, செகந்திராபாத் – ஐதராபாத், செகந்திரபாத் – டில்லி, டில்லி –… Continue reading தனியாரிடம் செல்கிறது இந்திய ரயில்வே.
RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றினார்.அதில், ‘காந்தியடிகளைத் தவிா்த்து, ஆா்எஸ்எஸ் அமைப்பை இந்தியாவின் அடையாளமாக்க அவா்கள் முயற்சிக்கின்றனா்.இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சம்பவங்களைக் கண்டிருந்தால், காந்தியடிகளின் ஆத்மா சோகத்தில் துடித்திருக்கும்.பொய்ப் பிரசாரங்கள் மூலம் அரசியல் செய்பவா்கள், காந்தியடிகள் உண்மையைக் கடைப்பிடித்தவா் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வாா்கள்? ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் நபா்கள், காந்தியடிகளின் சுயராஜ்ஜியத்தை எவ்வாறு புரிந்து… Continue reading RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க.
ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 7 மற்றும் 8-ம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி பண்டிகை என்பதாலும் அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும். இதனால் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக 6,145 சிறப்பு… Continue reading சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க.