ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்படுகிறது. எனவே அது அதிக சத்துகள் கொண்டதாக உள்ளது,'' என்கிறார் அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியல் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் பிளெஸ்ஸோ. மற்ற உணவுகளுடன் சேர்த்து முட்டை சாப்பிடும்போது, அதிக வைட்டமின்களை நமது உடல்… Continue reading முட்டை ஆரோக்கியமா ஆபத்தா ?? – ஆரோக்கியம்
Category: News
கீழடியில் அருங்காட்சியகம்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் க. பாண்டியராஜன், "கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, இந்திய… Continue reading கீழடியில் அருங்காட்சியகம்.
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.
இராமநாதபுரம் | செப் 28 -2019 வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை *********************************************************************** கடந்த 2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது… Continue reading வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.
இதயமே நலமா ?? – மருத்துவம்
மருத்துவ விகடன் இதழில் வெளிவந்த கட்டுரை. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் என்பதால் My Thondi.Com மறு பதிப்பு செய்கிறது. மனித உடலுக்குக் கொழுப்புச்சத்து தேவையானது; முக்கியமானது. ஆனால், அதன் அளவு கொஞ்சம் அதிகமானாலும் உடலுக்கு ஏற்படுவது பிரச்னை. கொழுப்புச்சத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன, உடலிலிருக்கும் அதன் அளவை எப்படித் தெரிந்துகொள்வது, எத்தனை நாளைக்கு ஒருமுறை அதன் அளவைப் பரிசோதிக்க வேண்டும், அது அதிகரிக்க என்ன காரணம், உணவுப்பழக்கத்தை மாற்றுவதால் அதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்… ஏ… Continue reading இதயமே நலமா ?? – மருத்துவம்
ஹேப்பி பர்த் டே கூகுள்
இணைய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான கூகுள் நிறுவனம் தனது 21 வது பிறந்த நாளை இன்று (27-09-2019) கொண்டாடுகிறது. இதற்கென தனியான டூடுள் படத்தையும் அது வெளியிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட கூகுள் நிறுவனம் உலகின் அதிக வருமானம் ஈட்டும் இணைய நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் இணைய தளம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாட்களைக் கொண்டுள்ளது. ஹேப்பி பர்த்டே கூகுள். தொகுப்பு My Thondi.Com Team
உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.
இராமநாதபுரம் | செப் 27 - 2019 தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் உப்பூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி கொதி கலன்கள் அமைக்கும் பணிகளை பெல் (BHEL) நிறுவனம் துவங்கியுள்ளது. ₹12655 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட உப்பூர் அனல் மின்நிலையப் பணிகளை 2019 டிசம்பர் மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மின் நிலையத்திற்கு 359… Continue reading உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.
கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி
சென்னை | செப் 27 - 2019 இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுகாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி. இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி… Continue reading கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி
மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.
இராமநாதபுரம் | செப் 27 ஓமன் நாட்டில் வேலை செய்து வந்த நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள்… Continue reading மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.
புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் இன்று (26.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் TDCM-1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, விதை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொகுப்பு My Thondi.Com Team
விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:– மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு… Continue reading விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்